வணக்கம் நண்பர்களே..
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
இதற்க்கு முந்திய பதிவில் எனதும் சுதாவினதும் முதல் சந்திப்பு முதல் சந்திப்பு முதல் முத்ததை பற்றி எழுதி இருந்தேன்.அதன் பின்பு நான் அவளை தனிமையில் சந்திக்க சந்தர்ப்பங்கள் பெரிதாக அமையா விட்டாலும் கிடைக்கும் ஒரு சில் நிமிடங்களை நாங்கள் பயன் படுத்த தவறியது இல்லை.அப்போது எல்லாம் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதும்,சின்ன சின்ன உரசல்கள்,கிள்ளல்கள் எமக்குள் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு இருபீர்கள்.இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டு சென்றன.
இப்படியாக காலங்கள் கடந்து செல்லும் போது நான் எனது முதல் பதிவில் குறிப்பிட்ட எனக்கு கிடைத்த முதல் பெண் நண்பியின் மூலம் அவளின் நண்பி(ஷானிக்கா-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன் தொலைபேசி இலக்கம் எனக்கு கிடைத்தது.நானும் அவளுடன் தொலைபேசி மூலம் கதைக்க முயற்சி செய்தபோதும் அவள் என்னுடன் கதைக்க வில்லை.நானும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தேன்.ஒரு நாள் நான் ஷானிக்கா உடன் கதைக்க முயற்சி செய்த போது அன்று சந்தர்ப்பம் கிடைதது..சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு..இப்பவும் எனக்கு எந்த நாள்,இடம்,நேரம் கூட எனக்கு நினைவு இருக்கு.நேரம் இரவு பதினொரு மணி இருக்கும், இப்போ நீங்கள் இடத்தையும் கண்டு பிடித்து இருபீங்க..ம்ம் நீங்க நினைதது சரி தான் பா, ரெஸ்ரோறன்ற் தாங்க..நண்பர்களுடன் குடித்து கொண்டு இருந்தேன்..அன்று நான் என்னுடைய தொலைபேசி யில் அழைத்த போது மறுமுனையில் ஒரு பெண் குரல்..
"Hello"
"Hello"
ஏப்படி இருகீங்க
நீங்க?
என்னை தெரியலையா?
நீங்க யாருடன் கதைக்கணும்?
உங்க Number இல்ல இருந்து எனக்கு ஒரு call வந்து இருந்தது,அது தான் நான் callபண்ணினான்..
என்னுடைய Number இல் இருந்தா..எப்போ..?
ஒரு கிழமை இற்கு முதல்..
சான்ஸே இல்லயே..
இல்லை வந்துதே ,அல்லது எனக்கு எப்படி உங்க Number தெரியும்..
இப்படி கதைத்து கொண்டு இருக்கும் போது அங்கு வேறு ஒரு பெண்ணின் குரலும் கேட்டது..
நான்.. யார் உங்களுக்கு பக்கதில் இருந்து கத்தி கொண்டு இருக்கிறது?
அது எனது மச்சாள்..
மக்சாள்?
ஆம்,எனது Husband இன் sister
எனக்கு Wedding முடிந்து நான் இப்போ என் Husband இன் வீட்ட தான் இருகென்..
அவர்?
வெளினாடு..
Please இனி call பண்ணி Disturb பண்ணவேண்டாம்..
அவருக்கு தெரிந்தால் Problem ஆகிடும்
என்று சொல்லி விட்டு என் அழைப்பை துண்டித்து விட்டாள்..
நான் முதலே ஷானிக்கா வின் நண்பி இடம் ஷானிக்காவை பற்றி கேட்டு அறிந்து விட்டேன்..அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்பது எனக்கு முதலே தெரிந்து இருந்தாலும்,நான் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை.இது தான் நான் அவ்ளுடன் முதல் நாள் கதைத்தது.(நான்கு வருடங்களுக்கு முன்).அடுத்த நாள் நான் ஏனோ தெரியல ஷானிக்காவுடன் கதைக்க முயற்சி செய்யல..இரண்டு , மூன்று நாள் கழித்து மீண்டும் அழைதேன்..
Hello
உங்களை அல்லோ Call பண்ண வெண்டாம் என்று சொன்னான்..
Sorry..உங்க voice ஐ கேட்கனும் போல இருந்தது ,அது தான் call பண்ணினான்..,,
Sorry.. இனி நான் call பண்ன மாட்டன்..
நீங்க யாரு..?யார் உங்களுக்கு என் Number தந்தது ஏன்று சொல்லுங்க Please.?
அதானே சொல்லிடெனே..
இல்லை..நான் என் Number இல் இருந்து யாருக்கும் call பண்ணல..
உங்க Friends யாரவது மாறி call பண்ணி இருக்கலம்..
No chance..நான் யாரிடமும் என் phone ஐ கொடுப்பதில்லை..
உங்க Name என்ன?
ரொஷன்(Roshan)..உங்க name?
நான் தெரியாத ஆட்களுக்கு எல்லாம் பேர் சொல்வதில்லை..
ம்ம்..
OKey.இப்போ என்ன செய்றீங்க..
படிக்கிறேன்..
Ok நான் வைக்கிறேன்..
ஏன்..
எதுக்காக நான் கதைக்கணும்..
ம்ம்..
Bye.
Bye..
இந்த தடவை அவள் கல்லூரி விடுதி இல் இருந்தாள்.
இப்படியே ஷானிக்காவினுடான தொடர்பு படிப்படியாக வழர்ந்து கொண்டே போனது,அதே நேரத்தில் சுதா உடன் நான் வைத்து இருந்த உறவும் தொடர்ந்தது.சுதாவும் நானும் சந்திக்க சந்தர்ப்பங்கள் அமையாத போதும்,நாங்கள் வீதிகளில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வோம்.சுதா தான் குடும்பத்தாருடன் எங்கு போனாலும் என்னையும் அங்கு வர சொல்வாள்..அங்கே இருவரும் கண்களால் பேசி கொள்வோம்..பின் அன்று இரவு எங்கள் பார்வைகளை பற்றி தொலை பேசியில் கதைப்போம்.இப்படி தான் ஒரு நாள் சுதா குடும்பத்தாருடன் "கல்லூரி" ப்டம் பார்க்க போனாள்,என்னையும் வர சொல்லி ஆசையாக கேட்டாள்..நானும் போய்,அவள் குடும்பத்துடன் அமர்ந்து இருந்த ஆசனதிற்கு பின் இருந்து அவளை நிம்மதியாக படம் பார்க்கவே விடல..இப்படியாக சுதாவுடன் நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்க,அவளுக்கு வீட்டில் மாப்பிளை பார்த்து விட்டர்கள் என்ற செய்தி அவள் மூலமே எனக்கு தெரிய வந்துது..என்றோ ஒரு நாள் பிரிய போகிறோம் என்று தான் அவளுடன் பழகினான்..ஆனாலும் மனதின் மூலையில் ஒரு வலி,சோகம்.சுதாவிற்க்கும் அதே சோகம்..,வலி.. என்ன செய்வது..? இருந்தாலும் நாங்கள் பழைய மாதிரியே பழகி கொண்டு இருந்தோம்.
இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டு செல்ல செல்ல ,எனக்கும் ஷானிக்கா விற்குமான உறவு மிகவும் நெருக்க மடைந்தது ..ஒரு நாள் அவள் தான் என்னை காதலிப்பதாக சொல்லி ஒரு குண்டை தூக்கி போட்டாள்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்வது என்றே புரிய வில்லை.அப்போ எனக்கு தெரியவும் இல்லை இவள் தான் என் வாழ்க்கை ஐ தலைகீழா மாற்ற பொற்றாள் என ..
அடுத்த பதிவில் காதல் எனக்கு தந்த வலிகள் , சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன் .
உங்கள் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
good man..go ahead
ReplyDeleteneenga enna solla varinga
ReplyDeleteபெயர் குறிப்பிட விரும்பாத அல்லது Google மினஞ்சல் முகவரி இல்லாதவர்கள் இப்போ 'Anonymous' ஆஹா உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியும் .
ReplyDeleteநன்றி ..
அன்புடன்
குடிகாரன்
Its all in the game nanba.....
ReplyDeleteIt was very interesting.
ReplyDeleteThank you very much.
Expect more from you.
மூணு தடவ படிச்சு பார்த்தேன் ஒண்ணுமே புரியல. தலைப்ப பார்த்தபிறகுதான் தெரிஞ்சது நீங்க குடிகாரன்னு.
ReplyDeleteKudikaran pechu vidinthale pochu!
ReplyDeleteKudikkara thodarnthu elluthunga
ReplyDeleteThodarnthu elluthunga thalyva
ReplyDeletekudikaranna puriyama eluthonu
ReplyDeletebot ok