காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரனுக்காகாக ஒரு சிறு பதிவு..
மாசத்துக்கு ஒரு பதிவு என எழுதிக்கொண்டு இருந்த என்னை அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பதிவு எழுத தூண்டியது சகோதரன் பாலகிருஷ்ணன் சிவகுமாரின் படுகொலை.
வீதியில் சென்ற வாகனங்களுக்கு கல் எறிந்தார் என்ற ஒரே ஒரு குற்றதிற்க்காக என் சகோதரன் சில புத்தி ஜீவிகளினால் பம்பலப்பிட்டி கடலினுள்ளே அடித்து மூழ்கடிக்க பட்டு இருக்கிறார்.சட்டததை பேணிப்பாதுகாக்க வேண்டிய காவல்த்துறையே இந்த கொடூரத்தை முன் நின்று நடத்தி முடித்து இருகிறது.
முதலில் இந்த செய்தியை நான் இணைய தளத்தில் வாசித்த போது "பம்பலப்பிட்டியில் ஒருவர் பொதுமக்களால் அடித்து கொலை" என்று மொட்டையாவே இருந்தது.அப்போது அந்த செய்தி என்னை பெரிதாக பாதிக்கவும் இல்லை,அதை நான் கருத்தில் எடுக்கவும் இல்லை.ஆனால் பிறகு பிறகு ஒளிப்படத்துடனான செய்திகளை வாசிக்கும் போது தான் அந்த கொடூரம் புரிந்தது.படுகொலை செய்யப்பட்டவர் ஒரு மன நோயாளி..அவர் ஒரு தமிழர்..மூவர் சேர்ந்து சிவகுமாரனை கடலில் இருந்து வெளிவர விடாமல் பொல்லுகளாலே அடித்து அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் அந்த கொலை வெறியர்கள்.அந்த அப்பாவி சகோதரன் எவ்வளவு மன்றாடியும், கை எடுத்து கும்பிட்டும் அவன் மீது இரக்கம் வரைல்லை அந்த கொலை வெறியர்களுக்கு..ஏன் அந்த கொலை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.அவர் ஒரு தமிழ்ர் என்பதற்காக அப்படி அனாதரவாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நம் நாட்டில் வாகனங்க்களுக்கு கல் எறிந்தால் இது தான் தண்டனையா?? இலங்கை எதை நோக்கி போய்க்கொண்டு இருக்க்றது??
அந்த சகோதரன் செய்த பாவம் தான் என்ன??
மன நோயாளியாக பிறந்தது அவன் குற்றமா?? அல்லது
தமிழனாக பிறந்தது தான் குற்றமா??
அந்த சகோதரனின் பெற்றோரின் நிலை ... பெற்றொரின் மனம் எவ்வளவு துடிக்கும்..
கடவுள் உண்மை இலையிலே இருக்கிறாரா..?
தமிழர்கள் இனி யாரை நம்பி இருப்பது.
அந்த சகோதரனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment