Monday, June 22, 2009

வேண்ட தகாத சம்பவங்கள்..

நண்பர்களே,
"குடி காரன் பேச்சு விடிந்தால் போச்சு என்று சொல்வார்கள்" அதில் உண்மை இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அது தான் முடிவாகாது.
.ஒருவன் போதை இல் இருக்கும் போது தான் அவன் இதயம் பேசும்.சரி சரி குடிகாரருக்கு இவ்வளவு பில்ட் அப் தேவை தானா என்று கேட்பது புரிகிறது..

நேற்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின,போட்டியை பார்க்க வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.நணபர்கள் எல்லோரும் க்கு அதே பிரச்சனை..அதனால் எல்லோரும் சேர்ந்து முடி வெடுத்தோம் ரேஸ்டோறன்ற் இற்கு போவது என.அங்குபொனால் குடித்ததும் ஆகுது போட்டி அய் பார்ததும் ஆகுது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..ஆனால் அன்று எல்லா ரெஸ்டொரன்ற்ம் குடி மக்களால் நிரம்பி இருந்தது.வடிவாக போட்டியை ரசிக்க கூடிய மாதிரி ஒரு ரெஸ்டொறன்ற் அய் தேடிப்பிடிக்க போட்டி ஆரம்பமாகி விட்டது..

இலங்கை அணியின் விக்கற்றுக்கள் மழ மழ என சரிய தொடங்கின,சிலருக்கு சந்தோசம் சிலருக்கு கவலை.இலங்கை அணி தனது முக்கியமான விக்கற்றுக்களை முதலில் பற் கொடுத்து விட்டது.குறிப்பாக டில்ஸான் இன் மிக சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்தது தான் இலங்கை அணியின் ஓட்ட வீதததை பாதிதது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.ஒரு புறம் சங்கக்கார தன் பொறுப்பு உணர்ந்து விளையாட மறுபக்கதில் விக்கற்றுக்கள் சரிந்து கொண்டு இருந்தன.ஜெயவர்தன மிக குறைந்த ஒட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது சில நணபர்களின் கடுப்பை கூட்டியது.அவர்களுடைய கருத்து ஜெயவர்தன வேண்டும் என்றே ஆட்டம் இழ்ந்ததாகவும்.அவர் சங்கா வின் தலமை இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதை அவர் விரும்பவில்லை என்பது அவர்களின் விவாதமாக இருந்தது..நீங்க என்ன நினைகிறீங்க?

ஒருமாதிரி இலங்கை அணி தடுதடுமாறி சங்கா வின் துணையோடு 138 என்ற இலக்கை நிர்ணயித்தது,பாகிஸ்தான் அணியின் ஆரம்ப ஆட்டமே இலங்கை அணியின் உலகக்கிண்ண கனவை குறைத்து விட்டது.
கம்றன் அக்மால் ஆட்டம் இழந்ததும் வந்த அஃப்ரிடி யின் நிதான் ஆட்டம் பாகிஸ்தானுக்கு உலகக்கிண்ணததை இலகு வாக்கியது..பாகிஸ்தான் உலகக்கிண்ணதை கைப்பற்றியதும் நண்பர் ஒருவர் சொன்னார்,அப்பாடா.. வெடி சத்தங்கள் கேட்காது என..உண்மை தான் தலை நகர தமிழ் மக்கள் ரொம்பவே பாதிக்க பட்டுடார்கள்..

அடுத்த நாள் காலமை தான் அந்த துயர செய்தி தெரிந்தது..அதாவது நேற்று வெள்ளவதை இல் இரு குழுக்குள் நடந்த மோதலில் இரண்டு இழம் உயிர்கள் பலி...ஏற்கனவே எதனையோ இழப்புகளை சந்த்துது துவண்டு போயிருக்கிறது தமிழ் இனம்..அதற்குள் இப்படியானதும் தேவை தானா,,
ஏன் இந்த கொலை வெறி..ஏதற்காக சண்டை..இப்படி வீரம் செறிந்த இளையர்கள் தமிழ் மண்ணிற்காக உயிரை கொடுது இருந்தால்..ஏன் இந்த நிலை..
குடி யால் தான் வந்தது என்று நீங்க சொல்லாம்..எந்த போதையிலும் ஒரு கொலை செய்ய சாதாரண ஒருவரால் முடியாது என்றே சொல்லலாம்.. அந்த இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பதின் வேதனை..இழப்பு ஒரு பக்கம், அதுவும் குழு சண்டை இல் , போதை இல் என்றால் அவர் களின் வலி ..உண்மை ஆகவே சொல்லில் அடங்காது...
ஆந்த உயிர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறென்..
அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு இப்போ எல்லாம் புரிந்து இருக்கும்..அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் பயத்துடனே யே கழியும் என்பதில் சந்தேகம் இலலை..
இனியாவது நண்பர்களே இப்படியான வேண்டதாகத சம்பவங்கள் இடம் பெறாமல் தவிர்த்து நடப்போம்...
எம் உறவுகள் முகாம் களில் படும் கஸ்டங்களை கொஞ்சம் ஆவது புரிந்து நடப்பொம்..

எதுவும் எல்லை மீறினால் அது வீண் விபரிதமாகவே முடியும்..

நான் இவற்றை பற்றி கதைக்க தகுதி இல்லாதவன் தான்..மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபம் தான்..
இருந்தாலும் நான் சொல்வென்...

நன்றி
Reblog this post [with Zemanta]

No comments:

Post a Comment